உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பெரிய தவறு

1

Posted on : Friday, April 12, 2013 | By : ஜெயராஜன் | In :

மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்கிற மிகப் பெரிய தவறு என்ன தெரியுமா?மகிழ்ச்சிக்குக் கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்வது தான். வாழ்க்கையில் அனுபவித்து மகிழ்வதற்கு சிறியதும் பெரியதுமாக ஏகப்பட்ட விசயங்கள் இருக்கின்றன.துரதிருஷ்ட வசமாக இவற்றை உணராமல்,இவை இவை இப்படித்தான் இருக்க வேண்டும்,அப்போதுதான் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நமக்கு நாமே நம்மைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டு உழன்று கொண்டிருக்கிறோம்.அவ்வப்போது ஆசையின் காரணமாக அந்த வட்டத்தை இன்னும் கொஞ்சம் பெரிது படுத்திக் கொண்டே போவதால் வாழ்க்கையில் திருப்தி,மகிழ்ச்சி ஆகியவை எட்டாக் கனி ஆகி விடுகின்றன.
******
''கோபம் என்பது சோகத்தின் ஒரு உருவம்.சோகம் என்பது கோபத்தின் மென்மையான வெளிப்பாடு.கோபம் என்பது சோகத்தின் ஒரு தீவிரமான வெளிப்பாடு,''என்கிறார்,மனவியல் அறிஞர் சிக்மன்ட் பிராய்ட்.சோகம் என்பது நிறைவேறாத ஆசை.இந்த சோகம் எப்போதும் அடங்கியே இருக்காது.சில சமயம் அது தீவிரமடைந்து கோபமாக வெளிவரும்.
******
மக்கள் பிரச்சனைகளை எப்படி தவறாக அணுகுகிறார்கள்?
*எதைப் பற்றியும் மிக அதீதமாகக் கற்பனை செய்து கொள்வது.
பிரச்சினைகளிலேயே மூழ்கி விடுவது.
அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பது.
*எதையுமே பெரிது படுத்தாத ஒரு அணுகுமுறை.
பிரச்சினையின் தன்மையை முழுமையாக உணராமல் இருப்பது.
*பிரச்சினையின் தன்மையை நன்கு அறிந்தும் அதற்கு உரிய முக்கியத்துவம் தராமல் அலட்சியப்படுத்துவது.
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

/// முக்கியத்துவம் தராமல் அலட்சியப்படுத்துவது ///

உண்மை...

Post a Comment