உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

இல்லை,இல்லை.

1

Posted on : Thursday, April 18, 2013 | By : ஜெயராஜன் | In :

ஈசலுக்கு வயிறு இல்லை.
தேளுக்குக் காதுகள் இல்லை.
மண் புழுக்களுக்குக் கண்கள் இல்லை.
ஈக்களுக்குப் பற்கள் இல்லை.
வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாய் இல்லை.
ஆண் கொசுக்கள் கடிப்பது இல்லை.
பூச்சிகள்,புழுக்கள் தூங்குவது இல்லை.
ஆமைக்குப் பற்கள் இல்லை.
முதலை,மீன் பாம்பின் விழிகளுக்கு இமைகள் இல்லை.
குளிர்ப்  பிரதேசத்தில் பல்லிகளே இல்லை.
குளிர் காலத்தில் குயில் கூவுவது இல்லை.
கிவி பறவை பறப்பதில்லை.
வௌவால் முட்டை இடுவதில்லை.
பறவைகளுக்கு சிறுநீர்ப் பை இல்லை.
******
ஏழு பிறப்பிலும் நான் உனக்கே மகனாகப் பிறக்கக் வேண்டும் என்று தாயிடம் சொல்வார்கள்.அந்த ஏழு பிறப்புக்கள் யாவை?
தேவர்,மனிதன்,விலங்கு,பறவை,ஊர்வன,நீர் வாழ்வன ,தாவரம்.
******
ஈரேழு உலகம் என்று சொல்கிறார்களே,அவை என்ன தெரியுமா?
மேல் உலகம்:
பூலோகம்,புவம்,சொர்க்கம்,மர ,தவம்.பிரமம்,சிவலோகம்.
கீழ் உலகம்:
அதலம் ,விதலம்,சுதலம்,நிதலம்,தராதலம்,பிசாதலம்,பாதாளம்.
******
நமக்கு 32 பற்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும்.அவற்றின் வேலை என்ன?
கடிப்பதற்கு -8 பற்கள்
கிழிப்பதற்கு-4  பற்கள்.
வெட்டுவதற்கு-8 பற்கள்.
அரைப்பதற்கு-12 பற்கள்.
******
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

அனைத்தும் அறிந்து கொள்ள வேண்டியவை... மிக்க நன்றி...

Post a Comment