உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தெரியுமா?-4

0

Posted on : Tuesday, April 16, 2013 | By : ஜெயராஜன் | In :

எரிமலைகளில் இரண்டு வகைகள் உள்ளன.
பெசால்டின்:பூமிக்குக் கீழே ஐந்து கி.மீ.ஆழத்தில் நெருப்புக் குழம்பு ஆறு போல ஓடிக் கொண்டிருக்கும்.பூமிக்கு மேலே வராது.இவ்வகை ஆப்பிரிக்கக் காடுகளில் உண்டு.
அப்சிடியன்;பூமிக்குக் கீழே 12 கி.மீ.ஆழத்தில் இருக்கும்.இதுதான் எரிமலையாய் வெடித்து வெளியில் வரும்.
******
உணவுப் பொருட்களை நீண்ட நேரம் நன்றாக மென்று சாப்பிட்டால் அந்த உணவு மிக சுவையாய் இருப்பதேன்?
நீண்ட நேரம் மெல்லும்போது எச்சில் நிறைய சுரக்கும்.அதில் இருக்கும் அமிலேஸ் (amilase)என்ற சுரப்பியானது(enzyme) உணவில் உள்ள ஸ்டார்ச்சை உடைத்து சாதாரண சர்க்கரையாக மாற்றுகிறது.எனவே உணவு சுவையாய் இருக்கிறது.
******
வீட்டில் ஆப்பம்,கேக் இவை செய்யும்போது சோடா உப்பு போடுவார்கள்.ஏன் தெரியுமா?
சோடா உப்பு என்பது சோடியம் பைகார்பனேட் ஆகும்.அடுப்பில் சூடு படுத்தப்படும்போது அதிலிருந்து கார்பன் டை ஆக்சைட் வெளிவருகிறது.இந்த வாயுவானது சிறு சிறு குமிழ்களாக அந்த மாவுக்கு இடையில் மாட்டிக் கொள்கிறது.மேலும் சூடாகையில் இந்த வாயுவானது விரிவாகி ஆப்பத்தையோ,கேக்கையோ இலேசானதாகவும் பஞ்சு போல மென்மையானதாகவும் ஆக்குகிறது.பூரி உப்புவது கூட இந்த கார்பன் டை ஆக்சைடினால் தான்.
******
தீக்கோழி(ostrich) இடும் முட்டைதான் பறவை முட்டைகளிலேயே மிகப் பெரியது.ஒரு முட்டையை 12 பேர் சாப்பிடலாம்.ஹம்மிங் பறவை (humming bird)இடும் முட்டைதான் மிகச் சிறியது.ஒரு முத்தின் அளவுதான் இருக்கும்.
******
பறக்கும்போது உறங்கும் பறவை கீகல்.
******
தக்காளியை முதலில் பயிர் செய்த நாடு அயர்லாந்து.
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment