உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எது மகிழ்ச்சி?

2

Posted on : Thursday, April 11, 2013 | By : ஜெயராஜன் | In :

அடுத்தவருக்கு வலியை ஏற்படுத்துவதுதான் மகிழ்ச்சி என்று குதர்க்கமாக யோசிக்கும் போது நம் வாழ்வின் நோக்கம் சிதைந்து போகும்.அது நம் உள்ளே உள்ள எதிரி.எதிரி வெளியில் இருந்தாலாவது அவரை சமாளிக்க வாய்ப்பிருக்கிறது.அவர் உங்களுக்குள் இருந்தே ஆட்டுவிக்க ஆரம்பித்து விட்டால் உங்களது வாழ்வு அதல பாதாளத்துக்கு இழுத்து செல்லப்படும். பிறகு,உங்களது மகிழ்ச்சியை அழிக்க வெளியிலிருந்து இன்னொரு எதிரி எதற்கு?நீங்களே போதும்.மாறாக உங்களது மகிழ்ச்சியை வெளிச் சூழல்களுக்குப் பணயம் வைக்காமல்,உள்ளே அமைதியாக இருக்கக் கற்றுக் கொண்டால்,உங்கள் திறமை முழுமையாக வெளிவரும்.வெற்றிகள் உங்களைத் தேடிவரும்.மகிழ்ச்சி தானே வரும்.
******
ஒரு வெற்றியை எதிர்பார்க்கும்போதே,அது கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சமும் நிழல் போலத் தொடர்ந்து வரும்.எதிர்பார்ப்பு எங்கே இருந்தாலும் அங்கே  ஏமாற்றத்துக்கும் இடம் இருக்கும். எங்கே ஏமாற்றம் இருக்கிறதோ,அங்கே  எரிச்சல் தானாகவே வேகத் தடையாகக் குறுக்கிடும்.காத்திருக்கப் பொறுமை இல்லாமல் கவனம் சிதறும்.
முடிவைப் பற்றிய சிந்தனை இல்லாமல், செய்வதை முழு விருப்பத்துடன் செய்து பாருங்கள்.வெற்றியை பற்றி எண்ணிக் கொண்டிராமல் முழு ஈடுபாட்டுடன் செயல் படுங்கள்.அப்போது தோல்வி பற்றிய பயம் வராது.பயம் இல்லாத இடத்தில் பதற்றம் இருக்காது.பதற்றம் இல்லாத இடத்தில் கவனம் சிதறாது.கவனம் சிதறாதபோது செயலிலே மகிழ்ச்சி கிடைக்கும். மகிழ்ச்சியுடன் செயல்படும்போது முழுத் திறமையும் வெளிப்படும்.அப்போது வெற்றி நிச்சயம்!
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

உண்மை உண்மை வரிகள்... நமக்குள்ளே உள்ள எதிரியை விட பெரிய எதிரி ஏதுமில்லை என்பதை அருமையாக சொல்லி விட்டீர்கள் ஐயா...

good......

Post a Comment