உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிரிப்பு வருதா ?

0

Posted on : Friday, September 07, 2012 | By : ஜெயராஜன் | In :

''நான் எழுதிய கதையைப் படித்தாயா?''
'படித்தேன்.ஜீரணிக்கவே முடியவில்லை.'
''உன்னைப் படிக்கத்தானே சொன்னேன்.சாப்பிடவா சொன்னேன்?''
********
''என்ன கடைக்காரரே,வாழைப்பழம் ஒரு சீப்பு வாங்கினால் ஒரு சீப்பு இலவசம் என்று சொல்லிவிட்டு ,இப்படிப் பண்ணிப் புட்டீங்களே?''
'அப்படி என்ன பண்ணிவிட்டேன்?'
''இலவசமா தலை வாருகிற சீப்பைக் கொடுத்துவிட்டீர்களே!''
********
''அரிசி விலை என்ன?''
'கிலோ நாற்பது ரூபாய்.'
''கொஞ்சம் குறைச்சுப் போடக் கூடாதா?''
'ஏற்கனவே எங்கள் கடையில் வாங்கினால் ஒரு கிலோவுக்கு 900கிராம்தான் இருக்கு என்கிறார்கள்.இதைவிட குறைக்க எனக்கு மனசில்லீங்க.'
********
கணவனை இழந்த பெண் ஒருத்தி தன கணவனின் ஆவியுடன் பேசினாள் .
''ஏங்க ,எப்படி இருக்கீங்க?''
'மிகவும் மகிழ்ச்சியாக இருக்கேன்.'
''பூமியில் என்னோடு இருந்ததை விடவா?''
'ஆம்,அதைவிட மகிழ்ச்சியாக இருக்கிறேன்.'
''அப்படியா,இப்போது நீங்கள் இருக்கும் சொர்க்கத்தில் அவ்வளவு வசதிகள் இருக்கின்றனவா?''
'சொர்க்கமா?நான் நரகத்தில் அல்லவா இருக்கிறேன்?'
********
பொது இடம் ஒன்றில் நான்கு சிறுவர்கள் கத்தி கலாட்டா செய்து கொண்டிருந்தார்கள்.அருகில் இருந்த பெரியவர் அவர்களைக் கண்டித்தார்.உடனே அச்சிறுவர்களின் தாயார் கோபத்துடன்,''அவர்கள் என் பிள்ளைகள்.அவர்கள் அப்படித்தான் விளையாடுவார்கள்.அதை கேட்க நீங்கள் யார்?''என்று சீறினாள்.உடனே பெரியவர் சொன்னார்,''எதுக்காக இவ்வளவு கோபப்படுகிறீர்கள்?அவர்கள் உங்கள் பிள்ளைகளாக இருக்கலாம்.ஆனால் நான் உங்கள் கணவர் இல்லையே!''
********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment