உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிந்தனை செய் மனமே!

1

Posted on : Saturday, September 01, 2012 | By : ஜெயராஜன் | In :

கடவுளிடம் முணு  முணுவென்று  பேசி அவரை அறுப்பதை நிறுத்துங்கள். பிரார்த்தனை உணர்வுடன் இருங்கள்.அவன் சொல்வதைக் கவனியுங்கள். அதுதான் தியானம்.
********
மற்றவர்களின் விமரிசனத்திற்கு முக்கியத்துவம் அளித்தால் வாழ்க்கையே நாசமாகிவிடும்.யாருக்கும் யாரையும் குறை சொல்லத் தகுதியில்லை..முழு மனிதனாக மாற நீங்கள் எப்படித் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்களோ, அப்படித்தான் அவர்களும் இருக்கிறார்கள்.
********
நம்மில் பலர் நாம் செய்துள்ள தவறை ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் வேதனையைத் தவிர்க்க வேண்டி பிறர் மீது பழி சுமத்துகிறோம்.
********
முன்பெல்லாம் மனிதர்களை நேசித்தார்கள்.
       பொருட்களைப் பயன் படுத்தினார்கள்.
இப்பொழுது.....
பொருட்களை நேசிக்கிறார்கள்.
       மனிதர்களைப் பயன் படுத்துகிறார்கள்.
********
 சிலரிடம் நிறைய இருந்தும் இன்னும் வேண்டும் என்று ஏங்குகிறார்கள். என்னிடம் குறைவாக இருந்தும் அந்த ஏக்கம் இல்லை.நிறைய இருந்தும் அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள்.நான் மற்றவர்களுக்குக் கொடுக்கும் நிலையில் இருக்கிறேன்.அவர்களிடம் ஒன்றும் இல்லை என்னிடம் நிறைய இருக்கிறது.அவர்கள் வாழ்வதில்லை.நான் வாழ்ந்து வருகிறேன்.
********


தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

சரியாகச் சொன்னீர்கள் சார்... நன்றி...

(இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை ப்ளாக்கில் இருந்து எடுத்து விடவும்...
Caution : Restore/Backup your HTML, before editing :

(1) Edit html Remove Indli Vote button script

(2) Remove Indli Follow Widget

தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)

Post a Comment