உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எவ்வளவு நிலம்?

0

Posted on : Friday, September 21, 2012 | By : ஜெயராஜன் | In :

உவமைக் கவிஞர் சுரதாவைப் பார்க்க உயரம் குறைவான ஒருவர் வந்தார்.அவர் சுரதாவிடம்,''நீங்கள் ஒரு பாடலில் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா,ஆறடி நிலமே  சொந்தமடா 'என்று சொல்லியிருக்கிறீர்கள். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமோ,'சட்டப்படி பார்த்தா எட்டடிதான் சொந்தம்'என்று எழுதியுள்ளார்.எது சரி?''என்று கேட்டார்.அதற்கு சுரதா சொன்னார்,''பட்டுக்கோட்டையார் நன்கு வளர்ந்தவர்.எனவே அவருக்கு எட்டடி தேவைப்பட்டது.நான் சராசரியான ஆள்.எனவே எனக்கு ஆறடி போதும்.உன்னைப்போன்ற குள்ளமான ஆட்களுக்கு மூன்றடியே போதும்.''கேட்டவர் உட்பட சுற்றியிருந்த அனைவரும் கொல்லென்று சிரித்துவிட்டனர்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment