உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பூவைக்கொடு

0

Posted on : Tuesday, September 04, 2012 | By : ஜெயராஜன் | In :

ஜப்பானில் யாருக்காவது கோபம் ஏற்பட்டால்,அவர் கோபமில்லாத செயல் ஒன்றை செய்தாக வேண்டும்.அப்போது இதுவரை கோபத்திற்கு சென்று கொண்டிருந்த ஆற்றலானது இப்போது கோபமின்மைக்கு  செல்கிறது.ஒருவர் மீது உங்களுக்குக் கோபம் வந்து அவரை அறைய வேண்டும் என்று தோன்றினால்,அவருக்கு ஒரு பூவைக் கொடுத்து,என்ன நிகழ்கிறது என்று பாருங்கள்.அறைய விரும்பினீர்கள்-அது கோபம்.பூவைக் கொடுத்தீர்கள்.அது கோபமில்லாத செயல்.அறைவதற்காக பயன்பட இருந்த ஆற்றல் பூக்கொடுக்கப் பயன்படுகிறது.ஆற்றல் நடு நிலைமையானது.ஏதாவது ஒன்று செய்யாவிடில் நீங்கள் அடக்கி வைக்கிறீர்கள் என்று பொருள்.அடக்கி வைப்பதே நஞ்சு.ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள்.ஆனால் நேர் எதிரானதைச் செய்யுங்கள்.இது புதிய தளை அல்ல.பழைய தளையை நீக்கவே இது.பழையது மறைந்ததும் முடிச்சுக்கள் மறைந்ததும் அதன்பின் எதையும் செய்ய நீங்கள் கவலைப் படவேண்டியதில்லை.பின் நீங்கள் தன்  இயல்பாக இயங்க முடியும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment