உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கவலை இல்லை

1

Posted on : Thursday, September 27, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு மரத்தில் அணில் ஒன்று தாவி விளையாடிக் கொண்டிருக்கும்போது தவறி கீழே நின்ற ஒநாயின் மீது விழுந்தது.ஓநாய்  அதை சாப்பிட எத்தனிக்கையில் தன்னை விட்டு விடுமாறு அணில் மன்றாடியது.அப்போது ஓநாய் ,''நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை சொன்னால் உன்னை விட்டு விடுகிறேன்,''என்றது. அணிலும்,''உன் பிடியில் நான் இருந்தால் எப்படி பதில் சொல்ல முடியும்?''என்று கேட்கவே ஓநாயும்  பிடியைத் தளர்த்தியது.உடனே மரத்தில் தாவி ஏறிய அணில்,''இப்போது உன் கேள்வியைக் கேள்,''என்றது.ஓநாய் கேட்டது,''உன்னை விட நான் பலசாலி.ஆனால் என்னைவிட மகிழ்ச்சியாக மரத்தில் எப்போதும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிறாயே!இது எப்படி சாத்தியம்?''அணில் சொன்னது,''நீ எப்போதும் கொடுமையான செயல்களையே செய்கிறாய்.அதுவே உன் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது அதனால் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.ஆனால் நான்  எப்போதும் யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை.மரங்களில் தானாகப் பழுத்த பழங்களை  மட்டுமே சாப்பிடுகிறேன்..அதனால் என் மனதில் எப்போதும் கவலையில்லை.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

அருமை... அருமை...

Post a Comment