உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

படி அளப்பான்.

1

Posted on : Wednesday, September 05, 2012 | By : ஜெயராஜன் | In :

முல்லா மிகவும் கவலையுடன் இருந்தார்.அப்போது அங்கு வந்த பெரியவர் ஒருவர் காரணம் கேட்டார்.முல்லா சொன்னார்,''மழை சரியாகப் பெய்யவில்லை.விளைச்சல் மிகவும் குறைவாக இருக்கிறது.என்ன செய்வதென்றே தெரியவில்லை.''பெரியவர்,''கவலைப்படாதே , முல்லா.இறைவன் மிகப் பெரியவன்.வானத்தில் பறக்கும் பறவைகளுக்கெல்லாம் படி அளக்கும் அவன் நம்மை விட்டு விடுவானா ?'' என்று ஆறுதல் சொன்னார்.முல்லா கடுப்பாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார்,''நன்றாக அளப்பார்!ஏற்கனவே விளைச்சல் குறைவு என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறேன்.இதில் இருக்கும் தானியங்களையும் அவர் பறவைகளுக்கு அளந்து விட்டால் நான் என்ன செய்வது?''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

ஹா... ஹா... நல்ல கேள்வி...!

Post a Comment