உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எதற்கு பரிசு?

0

Posted on : Thursday, March 15, 2012 | By : ஜெயராஜன் | In :

சீனாவில் ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருந்தவர் யான்யிங்.அவருடைய முதல் மூன்று ஆண்டு கால நிர்வாகத்தில் அவரைப்பற்றி நிறையப் புகார்கள் மன்னனுக்கு வந்தன.அவரைப் பதவியிலிருந்து நீக்க முடிவு செய்த மன்னன் அவரை அழைத்து தன் முடிவைச் சொன்னான்.யான்யிங்,மன்னரிடம் இன்னும் மூன்று ஆண்டுகள் பதவியில் தொடர அனுமதித்தால் புகார் இல்லாது செம்மையாக நிர்வாகம் செய்வதாகக் கூறியதால் அரசரும் அனுமதித்தார்.அதன்பின் அவரைப் பற்றி மன்னரிடம் பாராட்டுக்கள் வந்து குவிந்தன.மகிழ்ச்சி அடைந்த மன்னர் அவரை அழைத்து பரிசு தந்தார்.ஆனால் அதை யான்யிங் ஏற்கவில்லை.ஆச்சரியத்துடன் மன்னர் காரணம் கேட்க,அவர் சொன்னார்,''நான் முதலில் ஆளுநராய் சென்றபோது அங்கு அரசாங்கத்தில் இருந்த ஊழலை ஒழித்தேன்.குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டித்தேன். பணக்காரர்களுக்கும்,செல்வாக்கு படைத்தவர்களுக்கும் தனிச் சலுகை அளித்திட மறுத்தேன்.சலுகையை எதிர்பார்த்தவர்களுக்கு சட்ட பூர்வமானதை மட்டும் அனுமதித்தேன்.மேலதிகாரிகளை உபசரித்தபோது சிக்கனத்தைக் கடைப் பிடித்தேன்.எனவே பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் என்னை வெறுத்தனர்.என் மீது புகார்களை அனுப்பினர். பின் இந்த மூன்று ஆண்டுகள்,நான் பணி புரியும் விதத்தை மாற்றிக் கொண்டேன்.ஊழலை உதாசீனம் செய்தேன்.தண்டனைகளைக் குறைத்தேன்.சலுகைகளை வாரி வழங்கினேன்.இப்போது எல்லோரும் என்னை உயர்வாகப் பேசுகிறார்கள்.நான் என்னுடைய முதல் மூன்று ஆண்டு கால பணிக்குத்தான் கௌரவிக்கப் பட்டிருக்க வேண்டும்.இந்த மூன்று ஆண்டு காலப் பணிக்கு நான் தண்டிக்கப் பட வேண்டியவன்.அதனால்தான் நான் பரிசை ஏற்றுக் கொள்ளவில்லை.அதற்கு என் உள்ளுணர்வு ஒப்புக் கொள்ளவில்லை,''மன்னர் அடுத்த வாரமே அவரை வேறு ஒரு பகுதியின் பிரதம மந்திரி ஆக்கி சகல அதிகாரங்களையும் வழங்கினார்.
         ----'எப்போதும் இன்புற்றிருக்க...'என்ற வெ.இறையன்பு எழுதிய நூலிலிருந்து.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment