உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஒற்றைக்கால் செருப்பு

0

Posted on : Thursday, March 08, 2012 | By : ஜெயராஜன் | In :

போதி தர்மர் புத்த மதக் கொள்கைகளைப் பரப்ப ஒவ்வொரு நாடாகச் சென்று கொண்டிருந்தார்.அவர் வருகையை அறிந்த ஒரு நாட்டு மன்னன் தன் பரிவாரங்களுடன் தன் நாட்டின் எல்லையில் நின்று கொண்டிருந்தான்.போதி தர்மர் தன் சீடர்களுடன் வந்து கொண்டிருந்தார்.அவர் நடையில் ஏதோ வித்தியாசம் இருப்பதை உணர்ந்த அமைச்சர் கூர்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது;போதிதர்மர் ஒரு காலில் மட்டும் செருப்பை அணிந்து கொண்டு இன்னொரு செருப்பை கையில் வைத்துக் கொண்டும் இருந்தார்.கையில் செருப்புடன் மன்னரைப் பார்த்தால் மன்னருக்கு மரியாதைக் குறைவாயிருக்குமே என்று அமைச்சர் எண்ணினார்.என்ன செய்யலாம் என்று யோசித்த அமைச்சர் போதிதர்மரிடம் சென்று மரியாதையுடன்,''ஐயன்மீர்,தாங்கள் சுமக்கும் செருப்பை அடியேன் சுமக்க அருள் புரிய வேண்டும்,''போதிதர்மர் சிரித்துக் கொண்டே சொன்னார்,''பரவாயில்லை.இந்த செருப்பு இத்தனை ஆண்டு காலமாக என்னை சுமந்து வந்தது.இப்போது அதை நான் சுமப்பதுதான் முறையாகும்,''
ஞானிகளுக்கு, அறுந்த செருப்புக்கும் அரசனின்   மரியாதைக்கும்  பெரிய  வித்தியாசம் ஒன்றும் இல்லை.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment