உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கோபத்தைப் பிடி.

0

Posted on : Friday, March 09, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒருவர் ஞானியிடம் சென்று,''எனக்கு மிகவும் எளிதாகக் கோபம் வந்து விடுகிறது.அதனைக் கட்டுப்படுத்துவதுதான்  சிரமமாக இருக்கிறது.இதற்கு எப்படித் தீர்வு காண்பது?''என்று தன் பிரச்சினையைக் கூறித் தீர்வு கேட்டார்.ஞானி சொன்னார்,''உங்களுக்குக் கோபப்படுவது என்பது சுலபமான ஒன்று.அதனைக் கட்டுப் படுத்துவதுதான் சிரமமான ஒன்று.சுலபமான காரியத்தைச் செய்வது சுலபம்.கடினமான காரியத்தைச் செய்வது கடினம்.கடினமான காரியத்தை நீங்கள் செய்யவே வேண்டாம்.சுலபமான காரியத்தைச் செய்வதற்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டோம்...இப்போது,நீங்கள் காலையிலிருந்து மாலை வரை கோபத்துடனேயே இருக்க வேண்டும்.கோபப்படுவது சுலபம் என்று கூறி விட்டீர்கள்.மாலை வரை கோபத்துடன் இருந்து காட்டுங்கள்,''
இப்படி அவர் கூறியபின்தான் வந்தவருக்கு கோபத்தின் நடைமுறைத் தன்மை புரிந்தது.
கோபமோ எதுவோ,அது அது போக்கில் வந்துவிட்டு,அதுபோக்கில் போய் விடுகிறது.அது ஏதோ நமக்குக் கட்டுப் பட்டதுபோல நினைத்து நாம் அதனுடன் போராடி,தேவையற்ற பிரச்சினைகளை எல்லாம் கொண்டு வந்து விடுகிறோம்.
          ---''ஸ்ரீ பகவத் பார்வையில் ஜென் கதைகள்'' என்னும் நூலிலிருந்து.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment