உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எது ஆன்மிகம்?

0

Posted on : Thursday, March 01, 2012 | By : ஜெயராஜன் | In :

சூபி பெண் ஞானி ரபியா தன சீடர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தார்.அப்போது ஹாசன் என்ற துறவி அங்கு வந்து சேர்ந்தார்.ஹாசன் கர்வத்துடன் ரபியாவைப் பார்த்து சொன்னார்,''எனக்கு நீரில் நடக்கத் தெரியும்.நீங்களும் நீருக்கு வாருங்கள்.அங்கு நாம் அமர்ந்து ஆன்மீக விவாதங்கள் நடத்தலாம்,''ரபியா அமைதியாக சொன்னார்,''நீங்கள் இந்தக் குழுவிலிருந்து தனிமைப் படுத்திக் காட்ட விரும்புவது போலத் தெரிகிறது.பரவாயில்லை,நீங்கள் என்னுடன் வாருங்களேன்,அப்படியேகாற்றில் பறந்தபடி வானில் நமது விவாதத்தை வைத்துக் கொள்வோம்,''இந்தப் பதிலை எதிர்பாராத ஹாசன்,''என்னிடம் பறக்கும் சக்தி இல்லை,''என்று சொன்னார்.ரபியா சொன்னார்,''நீங்கள் சொன்ன நீரில் நடக்கும் சக்தி ஒரு மீனுக்குக் கூட இருக்கிறது.அதேபோல நான் சொன்ன காற்றில் பறக்கும் சக்தி சாதாரண ஈயிடமே இருக்கிறது.இந்த சக்திகளெல்லாம் நம்மைப் பற்றி பெருமை பேசவோ,அடுத்தவரைக் காட்டிலும் நான் உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ளவோ உதவுமே தவிர,ஆன்மீகத்துக்கு உதவாது,''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment