உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஜம்ஜம்

0

Posted on : Thursday, November 25, 2010 | By : ஜெயராஜன் | In :

மக்கா சென்று வரும் இஸ்லாமிய சகோதரர்கள் புனித நீரான ஜம்ஜம் நீரைக் கொண்டு வருவது வழக்கம்.ஜம்ஜம் என்ற பெயர் எப்படி வந்தது?
தீர்க்கதரிசி இப்ராஹீமுக்கு தொண்ணூறு வயதில் அவரது இளைய மனைவி ஹாஜகா மூலம் இஸ்மாயில் பிறந்தார்.இறைவனின் கட்டளையை ஏற்று கைக்குழந்தையையும் தாயையும் நெடுந்தொலைவிலிருந்த தண்ணீர் இல்லாத,புல் பூண்டு முளைக்காத,மக்கள் அற்ற பாலைவனத்திற்கு இட்டுச்சென்று தனியே விட்டுவிட்டுத் திரும்பினார்.தனியே விடப்பட்ட தாய்க்கும்,மகனுக்கும் கொண்டு வந்த உணவும்,நீரும் ஒரு நாள் தீர்ந்தது.குழந்தை தண்ணீருக்காக அழுதது.அன்னை பதைபதைப்புடன் நீரைத் தேடினார்.சப்பா,மர்வா என்ற இரண்டு குன்றுகளுக்கிடையே ஏழு முறை விறுவிறுக்க ஓடினார்.குழந்தை தரையில் உதைத்துக் கொண்டிருந்த இடத்தில் திடீரென தண்ணீர் பொங்கி ஓடியது.இறையருளை உணர்ந்த அன்னையின் வாய்,''ஜம்ஜம்''என்றது.ஜம்ஜம் என்றால் போதும்,போதும் என்று பொருள்.வற்றாத நீர்வளம் ஏற்பட்டதால்,மக்கள் அங்கு குடியேறி,பின்பு அது மக்கா பெருநகராகிவிட்டது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment