உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எனக்குத்தெரியாது

0

Posted on : Sunday, November 21, 2010 | By : ஜெயராஜன் | In :

ரஷ்யாவில் ஒரு யூத மத குரு வசித்து வந்தார்.இருபது வருடங்களாக அவர் தினமும் காலை குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சதுக்கம் வழியாக யூதத் திருக் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.இதை தினமும், யூதர்களை வெறுத்து வந்த காவலன் ஒருவன் கவனித்து வந்தான்.ஒரு நாள் அவன் அந்த மத குருவை வழி மறித்து,''எங்கே செல்கிறாய்,''என்று அதிகாரமாகக் கேட்டான்.அதற்கு அவர்,''எனக்குத் தெரியாது,''என்று பதிலுரைத்தார்.உடனே காவலன் கோபமுடன்,''நீ தினமும் யூதர் கோவிலுக்கு இவ்வழியே செல்வதை நான் கவனித்து வருகிறேன்.ஆனால் இப்போது எங்கே செல்கிறாய் என்று கேட்டால் தெரியாது என்று சொல்கிறாய்.உனக்கு நான் ஒரு பாடம் கற்பிக்கிறேன்,''என்று சொல்லியபடி அவன் அவரை இழுத்துக் கொண்டுபோய் சிறையில் தள்ளினான்.யூத மதகுரு அப்போது அவனைப் பார்த்து சொன்னார்,''நான் திருக்கோவிலுக்கு செல்லத்தான் வந்தேன்.ஆனால் ஆண்டவனின் திரு உள்ளம் எப்படி என்று எனக்குத்தெரியாது அதனால் தான் எனக்குத் தெரியாது என்று சொன்னேன்.இப்படி சிறைக்குவருவேன் என்று எனக்குத் தெரியாது.அதனால் நான் எங்கே போகிறேன் என்று எனக்குத்தெரியாது என்று சொன்னதன் பொருள் இப்போது புரியும் என்று நினைக்கிறேன்.''.

''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment