உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எகத்தாளம்

0

Posted on : Friday, November 12, 2010 | By : ஜெயராஜன் | In :

''அவன் எவ்வளவு எகத்தாளமாய் பேசுகிறான்?''என்று பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.அது என்ன எகத்தாளம்?
ஆதிதாளம்,அடதாளம்,திரிபுரதாளம்,ஜம்பதாளம்,ரூபகதாளம்,ஆகியவை பஞ்ச தாளங்கள் என்று அழைக்கப்படும்.ஒவ்வொரு ராகத்துக்கும் தகுந்த தாளம் வாசிக்க வேண்டும். இந்த ஐந்து தாளங்களையும் சேர்த்து வாசிப்பதற்கு ஏக தாளம் என்று பெயர்.பாடுபவருக்கும்,வாசிப்பவருக்கும் ஒத்து வராமல் போகும்போது வாசிப்பவர் வேண்டுமென்றே ஏக தாளமாக வாசிப்பார்.
அதேபோல கேட்பவரிடம் பதில் சொல்பவன் ஏறுக்கு மாறாகப் பதில் சொல்வதை ஏக தாளம் என்று சொல்லப்பட்டது.இது நாளடைவில் மருவி எகத்தாளம் என்று ஆகிவிட்டது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment