உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பாவங்கள்

0

Posted on : Saturday, November 06, 2010 | By : ஜெயராஜன் | In :

நான்கு பாதிரியார்கள் ஒரு இடத்தில் மகிழ்ச்சியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் சொன்னார்,''நாமெல்லாம் நல்ல நண்பர்கள்.பிறரிடம் சொல்ல முடியாத நம் பிரச்சினைகளை மனம் விட்டுப் பேசலாமே?''என்றார்.எல்லோரும் சம்மதிக்கவே அவர் சொன்னார்,''இப்போதெல்லாம் நான் அதிகம் குடிக்கிறேன்.அதை நிறுத்த முடியவில்லை.'' அவர் வெளிப்படையாகப் பேசியதைப் பார்த்து அடுத்தவர் தைரியம் அடைந்து ,''என்னுடைய பிரச்சினையே நான் அதிகம் சூதாடுவதுதான்.எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் அதிலிருந்து மீள முடியவில்லை.''மூன்றாமவர் சொன்னார்,''சமீப காலமாக என் கவனம் எல்லாம் ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பெண்ணை எப்படி அடைவது என்பதுதான்.பாவம் என்று தெரிந்தும் என் மனம் அதையே நாடுகிறது.''நான்காமவர் சொன்னார்,''என்னுடைய கெட்ட பழக்கம் என்னவென்றால்,ஏதாவது ஒரு செய்தியைக் கேள்விப்பட்டால்,அதை எல்லோரிடமும் சொல்லாமல் என்னால் இருக்க முடிவதில்லை.''மற்ற மூவரும் மயக்கம் அடையாத குறைதான்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment