உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வந்தாண்டா பால்காரன்!

0

Posted on : Sunday, November 07, 2010 | By : ஜெயராஜன் | In :

தண்ணீர் கலந்து பால் விற்கும் ஒருவன் முன் கடவுள் தோன்றி,பாலில் தண்ணீர் கலக்கும் காரணம் என்ன என்று கேட்டார்.அவன் சொன்னான்,''ஒரு குடம் பாலில் ஒரு குடம் தண்ணீர் கலந்தால் இரட்டிப்பாகப் பணம் கிடைக்கும்,''என்றான்.கடவுள் உடனே அவனுக்கு ஒரு குடம் பால் வரவழைத்துக் கொடுத்தார்.அவனும் கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு அவன் வழியே நடக்கலானான்.வேறேதேனும் வேண்டுமா எனக் கடவுள் அவனிடம் கேட்டார்.''உங்களால் முடிந்தால்...''என்று அவன் இழுக்க,''இன்னொரு குடம் பால் வேண்டுமா என்று கடவுள் கேட்டார்.அவன் சொன்னான்,''நான் அவ்வளவு பேராசைக்காரன் அல்ல.இன்னொரு குடம் தண்ணீர் கொடுத்தால் போதும்.அதை நீங்கள் கொடுத்த பாலில் ஊற்றி இரட்டிப்பாக்கி விடுவேன்.''அடுத்த நிமிடம் கடவுள் அந்த இடத்தில் நிற்க வில்லை.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment