பிறரிடம் மரியாதையாக இருப்பவர்கள்தான் அதிக தன் முனைப்புடையவர்களாக (EGOISTS)இருக்கிறார்கள்.அவர்கள் நிற்கின்ற பாங்கு,பேசுகிற விதம்,பார்க்கின்ற பார்வை,நடை எல்லாவற்றையும் மரியாதையாக இருப்பதுபோலக் காட்டிக் கொள்கிறார்கள்.ஆனால் உள்ளே அவர்களின் தன்முனைப்புதான் அவர்களைக் கையாளுகிறது.மிகவும் பணிவாக இருப்பவர்கள் ''தாங்கள் ஒன்றுமே இல்லை,கால்தூசு போன்றவர்கள்''என்று சொல்லிக்கொள்வார்கள்.ஆனால் அப்போது அவர்கள் கண்களைப் பார்த்தால் அங்கு தன்முனைப்பு ஆட்சி செய்வது தெரியும்.இதுமிக தந்திரமான தன்முனைப்பு ஆகும்.
மரியாதையாக இருப்பவர்கள் மிகவும் தந்திரக்காரர்கள்.சிறந்த சாமர்த்தியசாலிகள்.அவர்கள்,'நான் மிகச்சிறந்தவன்,'என்று சொன்னால் ஒவ்வொருவரும் அவர்களுக்கு எதிரிகள் ஆகி விடுவார்கள்.பிறகு போராட்டம் எழுகிறது.அவர்கள் தன்முனைப்பளர்கள் என்று முத்திரை குத்தப்படுவர்.அப்புறம் மக்களைத் தங்களுக்கு வசதியாக உபயோகப் படுத்திக் கொள்ள முடியாது.ஆனால் அவர்கள்,'நான் கால் தூசியைப் போன்றவன்'என்று சொன்னால்,மக்கள் எல்லோரும் அவர்களுக்கு தங்கள் கதவைத் திறப்பார்கள்.பிறகு அம்மக்களை அவர்கள் வசதிக்கு எப்படி வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.எல்லாவிதமான மரியாதைகளும் பண்பாடுகளும் ஒரு வகையான நாகரீகத் தந்திரத்தனமாகும்.
|
|
Post a Comment