உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அம்மா சுட்ட தோசை

0

Posted on : Tuesday, September 17, 2013 | By : ஜெயராஜன் | In :

அம்மா தோசை சுட்டுக் கொடுக்கக் கொடுக்க பையன் ஆவலுடன் சாப்பிட்டான்
வழக்கமாக ஐந்து தோசை சாப்பிடுவான்.அன்று எட்டு தோசை சாப்பிட்ட பின்னும் மீண்டும் தோசை கேட்டான்.அம்மா சொன்னார்,''தம்பி,இன்று போதும்.இதுக்கு மேல் சாப்பிட்டால் உன் வயிறு வெடித்துவிடும்.''பையன் சொன்னான்,''பரவாயில்லை அம்மா,நீ இன்னொரு தோசை சுட்டுக் கொடுத்து விட்டு, என் வயிறு வெடித்துவிடும் என்று பயந்தால் ஒதுங்கி நின்று கொள்.''
******
காதலன் காதலியிடம் சொன்னான்,''இன்று மட்டும் நமது வழக்கத்தை மாற்றிக் கொள்வோமே!''காதலி என்னவென்று கேட்டாள்.காதலன் சொன்னான்,''இன்று நீ என்னை முத்தம் இட முயற்சி செய்.நான் உன்னைக் கன்னத்தில் அறைகிறேன்.''
******
ஒருவன் நண்பனிடம் கேட்டான்,''ஒரு பெண்ணுக்கு எப்படி நீச்சல் சொல்லிக் கொடுப்பது?''நண்பன் சொன்னான்,''அது மிக நல்ல விசயமாயிற்றே!.
தண்ணீரில் இறங்கி முதலில் பெண்ணை இடுப்பை சுற்றிப் பிடித்துக் கொள்.பின் அவளுடைய வலது கையை மெதுவாக எடுத்து...''
''ஏய்,நிறுத்து.நான் என் சகோதரிக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும்.''
நண்பன் சொன்னான் ,''அப்படியானால் நீச்சல் மேடையிலிருந்து அவளை தண்ணீரில் தள்ளிவிட்டுவிடு.''
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment