உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மனிதன் மட்டும் சிரிப்பதேன்?

1

Posted on : Wednesday, September 18, 2013 | By : ஜெயராஜன் | In :

உலகில் உள்ள  உயிர் வாழ் இனங்களில் மனிதன் மட்டுமே சிரிக்கிறான்.எந்த விலங்கோ பறவையோ சிரிப்பதில்லை.அதே போல 'எனக்கு போரடிக்கிறது' என்று சொல்லக் கூடியதும் மனிதன் மட்டுமே.வேறு எந்த இனத்திற்கும் போரடிப்பது என்றால் என்னவென்று தெரியாது.எனவே இந்த இரண்டுக்கும் ஒரு பிணைப்பு உள்ளது.மனிதனுக்கு மட்டுமே ஆறறிவு உள்ளது .எனவே அவனால் சிந்திக்க முடிகிறது.அவன் இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் அனைத்தும் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறான்.இதனால் நாகரீகமும் அறிவு வளர்ச்சியும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மனிதனுக்கு சிந்தனைகளினால் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. இவற்றிற்கிடையே இடைவெளி ஏற்படும்போது மனிதன் வெறுமையை உணர்கிறான்.அதன் பிரதிபலிப்புதான் போரடிப்பது. போரடிப்பதற்கு மருந்துதான் சிரிப்பு.இந்த சிரிப்பு மட்டும் இல்லையென்றால் மனிதனுக்கு எப்போதும் நோய்தான்.விலங்குகளுக்கோ பறவைகளுக்கோ இந்த சிந்தனைகளும் எதிர்பார்ப்புகளும் இல்லை.அவை வாழ்வை அப்படியே எதிர் கொள்கின்றன.அதனால் அவற்றிற்கு சிரிப்பிற்கான அவசியம் இல்லை.ஆதிவாசிகள் மற்றும் பூர்வ குடி மக்களிடையே அதிகம் சிரிப்பு கிடையாது.அவர்கள் வசதிக் குறைவுடன் இருக்கலாம்.ஆனால் அவர்களிடம் அதிகம் எதிர்பார்ப்புகள் கிடையாது.அதனால் அவர்கள் எப்போதும் திருப்தியுடனும் மன நிறைவுடனும் இருக்கிறார்கள்.உலகிலேயே அதி புத்திசாலிகள் என்று யூத இனத்தை சேர்ந்தவர்களை சொல்வார்கள். நோபல் பரிசு வாங்கியவர்களில்  அதிகம் பேர் யூத இனத்தை சேர்ந்தவர்களே. அவர்களிடையே தான் நகைச்சுவை கதைகளும் துணுக்குகளும் அதிகம் .இருக்கின்றன.அவர்களுக்குத்தான் அதிகம் போரடிக்கவும் செய்யும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

nantri!

Post a Comment