உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

இராட்டினம்

2

Posted on : Thursday, September 12, 2013 | By : ஜெயராஜன் | In :

முல்லா, ஒரு பொருட்காட்சி சாலையில் ஒரு ராட்டினத்தில் சுற்றிக் கொண்டிருந்தார்.ராட்டினம் நின்றவுடன் வேகமாக இறங்கிக் கீழே சென்று தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் வேகமாக வந்து ராட்டினத்தில் ஏறிக்  கொண்டார்.இதுபோல திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்தார்.இவரை முழுவதும் கவனித்துக் கொண்டிருந்த ஒரு சிறுமி கேட்டாள், ''முல்லா, உங்களுக்கு ராட்டினத்தில் சுற்றுவது என்றால் அவ்வளவு ஆசையா?''முல்லா சொன்னார்,''இல்லை,அம்மா,எனக்கு ராட்டினத்தில்  சுற்றுவது பிடிக்கவே செய்யாது.தலை வேறு சுற்றும்,வாந்தி வரும்,''அச்சிறுமி ஆச்சரியத்துடன்,''பின் ஏன் மீண்டும் மீண்டும் சுற்றுகிறீர்கள்?''என்று கேட்க,முல்லா சொன்னார்,''என்னம்மா செய்வது?இந்தப்பயல் எனக்கு கடன் தர வேண்டியுள்ளது.நீண்ட நாட்களாகக் கேட்டும் தரவில்லை.இப்படியாவது ராட்டினத்தில் ஏறிக்  கணக்கை முடிக்கலாமே என்று நினைத்தேன்.''
******
முல்லா ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலித்தார்.அந்தப் பெண் ஒருநாள் சோகமாக வந்து,''முல்லா,என் அப்பா சொத்து முழுவதையும்  தொலைத்து விட்டார்.இப்போது நான் ஒரு ஏழை.என்னை எப்போதும் போலக் காதலிப்பீர்களா?''என்று கேட்டாள்.முல்லாவும் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு,''நான் உன்னை ஆயுள் முழுவதும் காதலிப்பேன்.இனி நீ என்னை எப்போதும் பார்க்க முடியாது என்றாலும் தொடர்ந்து நான் உன்னைக் காதலிப்பேன்.''என்றார்.
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

haa haaa..

சூப்பர்!

Post a Comment