உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நேரம் பாராது...

0

Posted on : Wednesday, September 11, 2013 | By : ஜெயராஜன் | In :

முல்லா ஒரு அலுவகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.தினசரி வேலைக்கு தாமதமாக வருவதைக் கவனித்த முதலாளி,''என்ன முல்லா,கடிகாரம் பார்ப்பது இல்லையா?''என்று கேட்டார்.முல்லா உடனே ,''எனக்கு  கடிகாரம் பார்க்கும் பழக்கம் போய்விட்டது.அதற்குக் காரணம் நீங்கள்தான்.''என்றார்,அதிர்ந்து போய் முல்லாவை முதலாளி பார்க்க,முல்லா தொடர்ந்தார்,''தினசரி அலுவலகத்தில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எல்லோரும் நேரம் பார்க்காது வேலை பார்க்க வேண்டும் என்று தானே அடிக்கடி சொல்கிறீர்கள்!அதை அப்படியே கடைப் பிடித்து வந்ததால் இப்போது கடிகாரம் பார்க்கும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது.என்ன...வீட்டிற்குப் போனாலும் இதே பழக்கம் தொடர்கிறது.''
******
முல்லா ஒருவரிடம் வேலை கேட்டுப் போனார்.தனக்கு அவர்கள் கேட்பது போல ஐந்து வருட அனுபவம் இருப்பதாகக் கூற அவருக்கு உடனே வேலை கிடைத்து விட்டது.சிறிது நாள் கழித்து அவரை முதலாளி கூப்பிட்டு அனுப்பி,''விசாரித்ததில் உனக்கு எந்த அனுபவமும் இருப்பதாகத் தெரியவில்லையே.ஏன் பொய் சொன்னாய்?''என்று கேட்டார்.முல்லா சொன்னார்,''நீங்கள்தான் இந்த வேலைக்கு  கற்பனைத்திறன் மிக்கவர்கள் வேண்டும் என்று கேட்டீர்கள்!''
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment