புலவர் ஒருவர்,ஒரு அரசனைக் கண்டு அவன் புகழைப் பாடினார்.அரசனும் ஏதோ சன்மானம் அளித்தான்.புலவருக்கு அதில் திருப்தியில்லை.அரசனுக்கு தன பாடலை ரசிக்கக் கூடிய அளவுக்கு புலமை இல்லை என்று எண்ணி அவன் மீது அவருக்கு கோபம் வந்தது.அரசன் சரியான கருப்பு.புலவர் அரசனைப் பார்த்து,''அண்டங்காக்கைக்குப் பிறந்தவனே,''என்றார்.அரசனுக்கு கடுங்கோபம் ஏற்பட்டது உடனே வாளை உருவினான்.நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த புலவர் புன்முறுவல் பூத்த முகத்துடன் அரசனிடம் சொன்னார்,''அரசே,அண்டம் என்றால் உலகம்.காக்கை என்றால் காப்பதற்கு என்று பொருள் அதாவது நீ உலகத்தை ஆள்வதற்குப் பிறந்தவன் என்று சொன்னேன்.''அரசன் முகத்தில் இப்போது மகிழ்ச்சி.உடனே மேலும் பரிசுகளைப் புலவருக்குக் கொடுத்து அனுப்பினான்.
|
|
Post a Comment