உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிந்திப்போம்

0

Posted on : Tuesday, October 19, 2010 | By : ஜெயராஜன் | In :

சொத்து சேர சேர ஒரு குடும்பத்தில் கலகம் உண்டாகும்.செல்வம் சேர சேர  ஒரு ஜாதியில் பிளவு உண்டாகும்.அதிகாரம் வளர வளர ஒரு  மதம் தன மரியாதை இழக்கும்.
**********
கர்வம் கொண்டவன் எல்லோரையும் தூஷிப்பான்.எல்லா நேரமும் தூஷிப்பான்.கர்வம் கொண்டவன் கடவுள் நிந்தனை செய்யவும் தயங்க மாட்டான்.
**********
எல்லா மதத்தினரும் இறை வழிபாட்டை வெறும் கர்வக் கொப்பளிப்பாக மாற்றிவிட்டார்கள்.அலட்டலாய் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அகம்பாவத்தின் உச்சகட்டமாக இறை வழிபாடு ஆகிவிட்டது.அதனால்தான் மற்ற மதத்தினர் மீது ஆத்திரம் வருகிறது.
**********
இந்த தேசத்தில் ஒவ்வொரு ஆணின் அகங்காரமும் அதிகமாக வெளிப்படுகின்ற இடம் மனைவியின் மீதுதான்.
**********
கர்வப்படக் கூடாது என்று கட்டளை போட்டால் கர்வப்படும்.பொய்  சொல்லாதே என்று மனசுக்குக் கட்டளை போட்டால் அது பொய் சொல்லும். கர்வப்படு என்று விட்டுவிட்டு,கர்வப்படுவதை வேடிக்கை பார்த்தா,நம்ம கர்வம் நம்ம எதிர்க்கே வெட்கப்பட்டு நம்மையே விட்டுட்டு ஓடிடும்.
**********
உதறி விடுவோமே என்று பயந்துதானே உரிமை கொண்டாடுகிறாய்.கலவரம் தானே உறவுக்குக் காரணம்?அதீத பயம் தானே  குழு மனப்பான்மை?
**********
இல்லறத்தைத் துறப்பது துறவல்ல.அகந்தையைத் துறப்பதே துறவு.மற்றதெல்லாம் வெளிவேஷங்கள்.
**********
ஆசை,ஆங்காரம்,அதைரியம் மூன்றும் புத்தியை அலுப்படைய  வைக்கும்.உடம்பிலுள்ள சுரப்பிகளை தேவையில்லாமல் வேலை வாங்கும்.அதனால் தூக்கம்,கனவு,மயக்கம்,வியாதி ஏற்படும்.ஆசையற்று இருப்பவருக்கு வியாதியில்லை.தூக்கமும் ஒரு வித நோயே.
**********
                        'என் கண்மணித்தாமரை'என்ற நூலில் பாலகுமாரன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment