வாழ்க்கையின் நிலையாமை குறித்து சித்தர்கள் பல பாடல்கள் எழுதியுள்ளனர்.அவற்றின் நோக்கம் வாழ்க்கையைக் கண்டு பயந்து ஓடுவதற்கு அல்ல .நம் வாழ்வில் நாம் நிதானத்துடன் நடந்து கொள்ள அவை பயன்படும் .இதோ ஒரு பாடல்:
ஊரைக்கூட்டி ஒலிக்கஅழுதிட்டு
பேரை நீக்கி பிணமென்று பெயரிட்டு
சூறையங்காட்டிடையே கொண்டு போய் சுட்டிட்டு
நீரில் மூழ்கி நினைப் பொழிவரே.
அதாவது ஒருவன் இறந்துவிட்டால்,ஊரில் அனைவருக்கும் தகவல் சொல்லி விட்டு,சப்தம் போட்டு அழுதுவிட்டு.இதுவரை ஒரு பேர் சொல்லி அழைத்து வந்த அவருக்கு பிணம் என்று பெயரிட்டு,சுடுகாட்டிலே கொண்டு போய் பொசுக்கிவிட்டு,நீரில் முழுகிக் குளித்துவிட்டு அதோடு அவர் பற்றிய நினைப்பை ஒழித்துவிட்டு தம் வாழ்க்கையைப் பார்க்கப் போய் விடுவார்கள்.
|
|
Post a Comment