உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பரிசு

0

Posted on : Friday, November 27, 2009 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஞானி இரவு பகலாக ஆன்மீக நூல்களைப் படித்துக் கொண்டிருந்தார்.ஒரு தேவதை அவர் முன் தோன்றி ,;;உனக்கு எல்லா வகை ஞானத்தையும் நான் தருகிறேன்.நீ ஏன்இரவில் இவ்வளவு சிரமப்பட்டு உன் சக்தியை வீணாக்குகிறாய்?''
ஞானி சொன்னார்,''உழைக்காமல் கிடைக்கும் பரிசு எதையும் என்னால் அனுபவிக்க முடியாது.நீங்கள் தரும் ஞானம் எனக்கு ஒரு சுமையாகவே இருக்கும்.''
ஆனால் தேவதையோ பிடிவாதமாய் ,''நான் வந்து விட்டேன்.உனக்கு பரிசு ஏதும் தராமல் போக மாட்டேன்.''என்றது.
கடைசியில் ஞானி ,''நீங்கள் ஏதேனும் உதவி செய்தே ஆக வேண்டுமானால் ,இதோ இந்த விளக்கிற்கு சிறிது எண்ணெய்ஊற்றிச் செல்லுங்கள்.பிறர்க்குப் பயன் படுத்தும் ஞானத்தை நான் பெறுவதில் உங்கள் பங்கும் இருக்கும்.''என்று கூறி விட்டு ஆத்ம திருப்தியுடன் படிக்க ஆரம்பித்தார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment