உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

இருக்கை

1

Posted on : Monday, November 23, 2009 | By : ஜெயராஜன் | In :

தன்னைப் பார்க்க வந்த ஒரு அறிஞரை ,ஒரு ஞானி உபசரித்து ஒரு ஆசனத்தில் அமரச் செய்தார்.அறிஞருக்கு ,தனக்கு அளிக்கப்பட்டஆசனம் ஞானி அமர்ந்திருந்த ஆசனத்தைவிட சற்றுக் குறைவாய் இருந்தது வருத்தத்தை ஏற்படுத்தியது.அவர் ஞானியிடம் ,''நீங்கள் என்னை அவமதித்து விட்டீர்கள்.நான் படித்த படிப்புக்கு இப்படித் தாழ்வான இருக்கையைத்தந்து கேவலப்படுத்தலாமா?''என்று கோபமாகக் கேட்டார்.ஞானி உடனே தன இருக்கையை அவருக்கு அளித்து விட்டுத்தான் கீழே அமர்ந்து அவருடன் பேசினார்.சிறிது நேரத்தில் அவர்கள் அமர்ந்திருந்த இடம் அருகே இருந்த ஒரு மரத்தின்மேல் ஒரு குருவி வந்து அமர்ந்தது.அதைக் கவனித்த ஞானி பேச்சு வாக்கில் ,''அறிஞரே ,அதோ உச்சாணிக்கொம்பில் அமர்ந்திருக்கும் குருவி தங்களை விட அதிகம் படித்திருக்குமோ?''என்று நாசூக்காக கேட்க அறிஞர் தன செயலுக்கு வெட்கப்பட்டு த்தலை குனிந்தார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

ஞானிக்கு மனிதனின் அமர்வுக்கும், பறவையின் அமர்வுக்கும், வேறுபாடு தெரிய வேண்டும். அந்தோ பரிதாபம்!

Post a Comment