உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பதவியின் மகிமை

0

Posted on : Sunday, November 22, 2009 | By : ஜெயராஜன் | In :

பெரிய பதவியில் உள்ள ஒரு அதிகாரி ஆபீசின் பின்புறமுள்ள கிணற்றில் விழுந்து விட்டார்.அவரைக் காப்பாற்ற ஊழியர்கள் அனைவரும் போராடினார்கள்.ஒரே பரபரப்பு.ஒருவர் கயிறைக் கட்டி உள்ளே இறங்க முயற்சி செய்தார்.இன்னும் சிலர் சட்டைகளைக் கழற்றி முடிச்சுப் போட்டு கிணற்றுக்குள் விட்டு ,''ஐயா,இதைப் பிடித்துக் கொள்ளுங்கள்''என்று கத்தினார்கள்.பெண்ஊழியர்கள் கிணற்றைச் சுற்றி நின்று அழ ஆரம்பித்து விட்டார்கள்.ஒவ்வொருவரும் தீவிரமாக அதிகாரியைக் காப்பாற்ற முயற்சி செய்தார்கள்.அந்த அலுவலரை பாதி அளவு மேலே தூக்கிக் கொண்டிருந்த சமயம் ,அந்தப் பக்கம் வந்த பியூன் ,''இந்த ஆபீசருக்கு வேலை மாறுதல் ஆகி விட்டது.புது ஆபீசர் வாசலுக்கு வந்து விட்டார்.''என்று தகவல் சொன்னார்.அவ்வளவுதான்.கிணற்றுக்குள் இருந்த ஆபிசரை அப்படியே போட்டு விட்டு புது ஆபிசரை வரவேற்க எல்லோரும் வாசலுக்கு ஓடி விட்டார்கள்.பதவிக்கு இருக்கும் மகிமை இது தான்!


ஒரு ஆபீசர் தன நாய்க்கு பிறந்த நாள் விழா ஒன்றிற்குத் தன வீட்டில் ஏற்பாடு செய்தார்.அலுவகத்தில் பணிபுரியும் அனைவரும் பரிசுகளுடன் வந்து விழாவை சிறப்பித்தார்கள்.ஒரே கோலாகலம்.கொண்டாட்டம்.
சில மாதங்களுக்குப் பின் அந்த ஆபீசர் பதவி ஒய்வு பெற்றார்.அதன் பின் ஒரு நாய் கூட அவர் வீட்டிற்கு வரவில்லை.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment