உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

திகைப்பு

0

Posted on : Wednesday, April 09, 2014 | By : ஜெயராஜன் | In :

''ஆண்டவன் தான் நம் வயிற்றை  நிரப்புகிறான்,''என்று ஆத்திகர் ஒருவர் தனது நாத்திக நண்பரிடம் சொன்னார்.''அதெப்படி,நாம் சாப்பிட்டால்தானே நம் வயிறு நிரம்பும்?''என்று கேட்டநாத்திகர் அதையும் சோதித்துப் பார்த்து விடுவது என்று நினைத்தார்.வீட்டில் மனைவியிடம் நிறைய உணவு தயாரிக்க சொல்லி அதை கட்டிக் கொண்டு ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு தான் கொண்டு வந்த சாப்பாட்டை திறந்து முன்னால்  வைத்துக் கொண்டு அதைத் தொடாமலேயே அமர்ந்திருந்தார்.நாம் சாப்பிடாமல் இருக்கும்போது ஆண்டவன் வந்து நம் வயிற்றை  நிரப்புகிரானா என்று பார்ப்போம் என்று நினைத்தார்.அப்போது இரண்டு முரடர்கள் அந்தப் பக்கம் வந்து இவனைப் பார்த்தார்கள்.அவர்கள் இருவருக்கும் நல்ல பசி.இவன் உணவை எடுத்து சாப்பிடலாம் என்று அவர்கள் யோசித்தபோது ஒருவன் கேட்டான் ,''இவன் எதுவும் பேசாமல் உணவைத் திறந்து வைத்தபடி இருக்கிறான்.ஒரு வேலை உணவில் விஷம் எதுவும் இருக்குமோ?''இருவரும் சிறிது நேரம் யோசித்து விட்டு உணவை எடுத்து இருவரும் வம்படியாக நாத்திகன் வாயில் ஊட்டி விட்டனர்.நாத்திகனுக்கு வயிறு நிரம்பி விட்டது.மீதி இருந்த உணவை முரடர் இருவரும் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து சென்றனர்.நாத்திகன் திகைப்பில் உட்கார்ந்திருந்தான்.அப்போது அவனது ஆத்திக நண்பர் வந்தார்.அவர்,''நான் நடந்ததைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்,ஏன் திகைத்துப் போயிருக்கிறாய்?நான் சொன்னது நடந்து விட்டது என்பதால்தானே?''என்று கேட்டார்.அதற்கு நாத்திகன் சொன்னான், ''இல்லை,என் மனைவி தயாரிக்கும் உணவு எனக்கு கொஞ்சம் கூடப் பிடிக்காது.இவர்கள் இருவரும் எப்படி இதை சாப்பிட்டார்கள் என்று எண்ணி திகைத்து நிற்கிறேன்,''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment