உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன்மொழிகள்-50

1

Posted on : Friday, April 04, 2014 | By : ஜெயராஜன் | In :

புகழ்ச்சியை விட கண்டனம் ஆபத்தில்லாதது.
******
எது தவறானதோ,அது விரும்பப்படுவதாகவும் இருக்கும்.
******
பொய் சொல்வது கேவலம் அல்ல.அது மனித இயல்பு.
அந்தப் பொய்யை நம்புவதுதான் கேவலம்.
******
ஆயிரம் முறை சிந்தனை செய்யுங்கள்.
ஆனால் ஒரு முறை முடிவெடுங்கள்.
******
வேலை செய்ய வேண்டியது நம் தலைஎழுத்து
என்று வேலை செய்பவன் அடிமை.
வேலை செய்வதுதான் சுகம்
என்று வேலை செய்கிறவன் கலைஞன்.
தேவை இல்லாத வேலைகளை
இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவன் முட்டாள்.
******
தூங்குகிறவனை எழுப்புவதற்காகப் பொழுது இருமுறை விடிவதில்லை.
******
எவ்வளவுதான் மறைத்து வைத்திருந்தாலும் எல்லோருடைய நெஞ்சிலும் புகழுக்கான ஆசை எப்போதும் ஆட்சி செய்து கொண்டுதான் இருக்கும்.
******
அனுபவம் மெதுவாகத்தான் கற்பிக்கும்.
தவறுகள் அதற்குரிய செலவுகள்.
******
அதிகப் பேச்சு,பொய் இவை இரண்டிற்கும் நெருக்கம் அதிகம்.
******
குழந்தைகள் இல்லையென்றால் உலகம் துன்பம் நிறைந்ததாகி விடும்.
முதியோர் இல்லையென்றால் உலகம் மனித இயல்பற்றதாகி விடும்.
******
விவேகத்திற்குத் தந்தை அனுபவம்.
******
மகிழ்ச்சி,மிதமான உணவு,போதிய ஓய்வு ஆகியவை வைத்தியரை வீட்டுக்குள் விடமாட்டா.
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

விடிவதில்லை இன்றைக்கு மிகவும் முக்கியம் ஐயா...

Post a Comment