உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

விழுந்த பல்

2

Posted on : Monday, April 21, 2014 | By : ஜெயராஜன் | In :

விழுந்து போன பல்லைக் கூட
விழுந்து கும்பிட வேண்டுமென்றால்,
பல் புத்தனுடையதாக இருக்க வேண்டும்.
******
நேற்று என்பது வெட்டி எறிந்த நகம்,
நாளை என்பது வெளுக்கப் போகிற கறுப்பு முடி.
******
ஓடுகிற வரை நீ நதி.
நின்றால் குட்டை!
******
வெந்த சோறே மனிதனுக்கு செறிப்பதில்லை.
குருவியின் குடல்,நெல்லைக் கூட அரைத்து
நீராக்கி விடுகிறது.
******
மற்றவர்களின் அபிப்பிராயங்களுக்காக
நீ கவலைப்பட்டால்,
தாயக்கட்டைகளே,
தாண்ட முடியாத மலைகளாகிவிடும்.
உனது அபிப்பிராயங்களுக்காக
மற்றவர்கள் கவலைப்பட்டால்
நிலவே உனக்கு நெற்றிப் போட்டாகும்.
******
உப்பு,செத்தவற்றைப் பாதுகாப்பதற்காக
உபயோகப்படுத்தப்படுகிறது.
அதை உயிரோடிருப்பவர்கள்
சேர்க்கிறோமே ஏன்?
******
பத்துமுறை கீழே விழுந்தவனைப்
பூமி முத்தமிட்டுச் சொன்னது ''நீ
ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா?''என்று.
******
குழந்தைகளை அடிகிறவர்கள்
தண்டனைக்குத் தப்பி விடுகிற கொலைகாரர்கள்.
******
மிருகங்கள் குழந்தைகளை அடிப்பதை
நான் ஒருபோதும் பார்த்ததில்லை.
நீதான் கோழி மிதித்து
குஞ்சு சாவதில்லை என்று
கோழிக்கே சொன்னவன்.
******
கோவில்கள் அதிகமாகி விட்டால்
எங்கே குடியிருப்பது என்ற சங்கடம்
இறைவனுக்கே வந்துவிடும்.
ஆகவேதான் பல இடங்களில்
ஆலயங்கள் இருக்கின்றன.
ஆண்டவன் மாத்திரம் இல்லை.
******
              ---வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் எழுதிய ''எல்லா ராத்திரிகளும் விடிகின்றன''என்ற நூலிலிருந்து.



தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

ஒன்பது முறை எழுந்தவன் உட்பட அனைத்தும் அருமை...

வலம்புரி ஜான்அவர்களின் கவிதைகள் ,அவருடைய வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால் ...அந்தக இரவில் சந்தன மின்னல்களாய் ஜொலிக்கின்றன ,,ரசித்தேன் !

Post a Comment