உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

காசாலேசா...

2

Posted on : Thursday, April 10, 2014 | By : ஜெயராஜன் | In :

வறுமையில் வாடிய புலவர் ஒருவர் செல்வந்தர் ஒருவரைப்  பாடிப்  பரிசு பெற்று வரலாம் என்று அவர் வீட்டிற்கு சென்றார்.அந்த செல்வந்தரோ எச்சில் கையாலும் காக்காய் ஓட்டாதவர்.புலவர் வந்த காரணத்தை சொன்னதும், செல்வந்தர் ஏளனமாக சிரித்துக் கொண்டே,''பாட்டுக்கு காசு வேண்டுமா?காசா லேசா?''என்றார்.புலவருக்கு கோபம் வந்து விட்டது. அவர், ''காசா லேசா, காசாலேசா''என்று கோபமாய் சொல்லிவிட்டு அங்கிருந்து விரைந்து வெளியேறிவிட்டார்.செல்வந்தருக்கும் அங்கிருந்த மற்றோருக்கும் ஒன்றும் புரியவில்லை.செல்வந்தர் காசாலேசா என்றார்.புலவரும் அதையே இரண்டு தடவை சொல்லிச் சென்றதன் பொருள் என்ன என்று புரியாமல் குழம்பினர்.புலவரின் நண்பர்ஒருவர் புலவரின் பின்னாலேயே சென்று அவர் சொன்னதற்கு என்ன பொருள் என்று கேட்டார்.அதற்குப் புலவர்,''அவனுக்கு பாட்டின் மகிமை தெரிவில்லை.காசாலேசா என்கிறான்.அதனால்தான்  நானும் கோபத்துடன் காசாலே சா,காசாலே சா என்றேன்.அதாவது காசாலே செத்துப்போ என்று பொருள்.''என்று விளக்கம் சொன்னார்.இதைக் கேள்விப்பட்ட செல்வந்தர் புலவரின் சாபத்துக்கு அஞ்சி அவரிடம் மன்னிப்புக் கேட்டு பரிசு கொடுத்து அனுப்பினார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

அருமை... விளக்கம் உண்மை...

அருமையான சிலேடை! பகிர்வுக்கு நன்றி!

Post a Comment