உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அர்த்தமெல்லாம் வேறுதான்.

0

Posted on : Tuesday, April 08, 2014 | By : ஜெயராஜன் | In :

கல்யாணம் ஆன புதிதில்ஒரு கணவனுக்கும் அவன் மனைவிக்கும் இடையே நடந்த உரையாடல்:
கணவன்: உங்க அம்மா வீட்டுக்குப் போறியா?
மனைவி:என்னைப் போகச் சொல்கிறாயா?
கணவன்:ஊஹூம்,அதை நினைத்துக்கூடப் பார்க்காதே.
மனைவி:உனக்கு என் மீது உண்மையான அன்பு இருக்கிறதா?
கணவன்:எப்போதும்.
மனைவி:எப்போதாவது என்னை ஏமாற்றியிருக்கிறாயா?
கணவன்:ஊஹூம்,ஏன் இப்படிக் கேட்கிறாய்?
மனைவி:என்னை முத்தம் இடுவாயா?
கணவன்:வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்.
மனைவி:என்னை அடிப்பாயா?
கணவன்:ஊஹூம்,உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?
மனைவி:நான் உன்னை நம்பலாமா?
கணவன்:ஹூம்.
மனைவி:என் அன்புக் கணவனே!

அது சரி,திருமணமானபின் பல ஆண்டுகள் கழித்தபின் அவர்களுக்கிடையே உரையாடல் எப்படி இருக்கும்?அதற்குத் தனியாக ஒன்றும் தயாரிக்க வேண்டாம்.மேலே கண்ட உரையாடலை கீழிருந்து மேலாகப் படியுங்கள் போதும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment