உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

திதிகள்.

0

Posted on : Thursday, August 28, 2014 | By : ஜெயராஜன் | In :

பலர் அன்றாட வாழ்வில் முக்கிய  காரியங்களை திதி பார்த்து செய்கின்றனர்.திதியின் பேர்கள் எல்லாம் சமஸ்கிருத வார்த்தைகள் அவற்றின் பொருள் தெரியுமா?அமாவாசை மற்றும்  பவுர்ணமியில் இருந்து
ஒவ்வொரு நாளும் அவை மாறுகின்றன.
பிரதமை=முதன்மை,அதாவது முதல் நாள்.(நாட்டின் முதல்வன் பிரதமர்)
துவிதியை.துவி என்றால் இரண்டு.(சைக்கிளைதுவிச்சக்கரவண்டி என்பர்)
திரிதியை.இதற்கு மூன்றாவது என்று பொருள்.
சதுர்த்தி.சதுர்  என்றால் நான்கு.(சதுரம் என்பது நான்கு பக்கங்களை உடையது.)
பஞ்சமி.பாஞ்ச் என்றால் ஐந்து.
சஷ்டி என்றால் ஆறு.
சப்தமி.சப்த என்றால் ஏழு.(சப்த கன்னியர் என்று ஏழு கன்னிமார் தெய்வங்களைக் குறிப்பிடுவர்.)
அஷ்டமி.அஷ்ட என்றால் எட்டு.(உடலில் எட்டு கோணல்கள் இருந்தால் அஷ்ட கோணல் என்பர்.)
நவமி.நவம் என்றால் ஒன்பது.(நவராத்திரி.)
தசமி.தசம் என்றால் பத்து.(தசாவதாரம் என்பது பத்து அவதாரம்)
ஏகாதசி.ஏகம் +தசம்.அதாவது ஒன்று+பத்து=பதினொன்று.
துவாதசி.துவம்+தசம்.அதாவது இரண்டு+பத்து=பன்னிரண்டு.
திரயோதசி.திரியோ+தசம்.அதாவது மூன்று+பத்து.
சதுர்த்தசி.சதுர் +தசம்.அதாவது நான்கு+பத்து.
பதினைந்தாவது நாள் அமாவாசை அல்லது பவுர்ணமி.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment