உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

காதல்

0

Posted on : Monday, August 11, 2014 | By : ஜெயராஜன் | In :

சொல்லுக்குப் பொருள் சொல்லோடு மட்டும் அல்ல,இடத்தோடும் இழைந்து  இருக்கிறது.'
''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,''என்று சம்பந்தர் பாடும்போது காதல் என்பது பக்தி.
''காதல் திருமகன்,''என்று ராமனை தசரதன் குறித்தபோது காதல் என்பது அன்பு.
''ஆதலினால் காதல் செய்வீர்,''என்று பாரதி பாடியபோது,காதல்  என்பது ஆண்,பெண் நட்பு.
''காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்த,''என்று பாரதிதாசன் பாடிய போது,காதல் என்பது உடல் உறவு.
''முதியோர் காதல்''என்று எழுதிய  போது காதல் என்பது உடல் கடந்த உணர்வு நிலை.
காதல் என்பது கடவுள் மாதிரி-இழுத்த இழுப்புக்கு வரும்;இஷ்டத்துக்குப் பொருள் கொள்ளலாம்.
                                                            ===கவிப் பேரரசு வைரமுத்து.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment