உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தெரிந்ததும் தெரியாததும்-2

0

Posted on : Sunday, August 17, 2014 | By : ஜெயராஜன் | In :

*புத்தருடைய விக்ரகம் உள்ள கோவிலுக்கு சைத்தியம் என்று பெயர்.
*கொல்லாமை,பொய்யாமை,கள்ளுண்ணாமை,காமமின்மை,இரவாமை என்ற ஐந்தை பஞ்சசீலம் என்பர்.
*பாரத யுத்தத்தின் முடிவில் எஞ்சியவர் பத்துப்பேர்தான்.அவர்கள்:பஞ்ச பாண்டவர் ஐவர்,அசுவத்தாமா,கிருபர்,கிருதவர்மா,சாத்தகி,கிருஷ்ணன்.
*பழந் தமிழகத்தில் ஒரு வீரன், தான் கொன்ற புலியின் பற்களைக் கோர்த்து தனது  காதலிக்கு அணிவிக்கும் பழக்கம் இருந்தது.அந்த வழக்கமே பின்னர் தாலி கட்டும் வழக்கமாக மாறியது.
*காமம்,கொலை,கள்ளுண்டல்,பொய்,களவு இவை ஐந்தும் பஞ்சமாபாதகங்கள்.
*சரம் என்றால் நாணல்.வனம் என்றால் காடு .நாணல் மிகுந்த காடு சரவணம்.அங்கு உள்ள பொய்கை சரவணப் பொய்கை.
*இரண்டு கைகள்,இரண்டு கால்கள்,வயிறு,இரண்டு கன்னம்,முகம் என்னும்  எட்டு  அங்கங்கள் நிலத்தில் படும்படி வணங்குதல் சாஷ்டாங்க நமஸ்காரம்.இரண்டு கைகள்,இரண்டு முழங்கால்கள்,முகம் என்னும்  ஐந்தும் பூமியில் படும்படி வணங்குதல் பஞ்சாங்க நமஸ்காரம்.
*'காசி'என்றால் பிரகாசிப்பது என்று பொருள்.
*சூர்ப்பம் என்பது முறத்திற்குப் பெயர்.முறம் போன்ற நகங்களை உடையவள் சூர்ப்பனகை.
*'ரசகதளி'என்ற பேரே ரஸ்தாளி என்று மருவியது.
*'ரூப்யம்'என்றால் வெள்ளி என்று பொருள்.முன்னர் வெள்ளியினால் செய்யப் பட்டதால் நாணயத்திற்கு ரூபாய் என்று பெயர் வந்தது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment