உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பாற்கடல்

0

Posted on : Wednesday, August 06, 2014 | By : ஜெயராஜன் | In :

கவிஞர் வைரமுத்து எழுதிய ''பாற்கடல்'' என்னும்  நூலிலிருந்து:

கல்மேல் உளி விழுவது போன்ற தாக்குதலும்,
விதை மேல் மழை விழுவது போன்ற பாராட்டும்
மனிதனை உயர்த்தும்.
******
அன்பு என்பது கூட  ஒரு வகை ஆதிக்கம்தான்.
******
நடை  கற்றுத் தருவதே பெற்றோர்  கடமை;
சாலைகள் அவரவர் உரிமை.
******
நிலா என்பது வளர்ந்த குழந்தை.
குழந்தை என்பது வளரும் பிறை.
வளர்ந்த நிலாவுக்குக் கறை உண்டு.
வளரும் பிறைக்குக் களங்கம் இல்லை.
******
பொன்மொழிகள் வண்ணத்துப் பூச்சிகள்.
சிலவற்றைப் பிடித்துக் கொள்கிறோம்.
பல பறந்து விடுகின்றன.
******
அறிவைப் பொருளாக்குதல் பலம்.
பொருள் தேடும் அறிவு மட்டும் போதும் என்பது பலவீனம்.
******
நூறாண்டு வாழப்போகும் மனிதன் அழுது கொண்டே  பிறக்கிறான்.
சில நாட்கள் வாழப்போகும் பூ சிரித்துக் கொண்டே மலர்கிறது.
******
பொறாமை என்பது முடியாதவர்களின் பாராட்டு.
******
நின்ற இடத்திலேயே நிற்க வேண்டுமா?
ஓடிக் கொண்டே இரு.
******
சாட்சியில்லாத இடத்திலும் நேர்மையாய் இருப்பது ஒழுக்கம்.
கண்காணா இடங்களையும் தூய்மையாய் வைத்திருப்பது சுத்தம்.
******



தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment