உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தேறாது.

1

Posted on : Sunday, February 03, 2013 | By : ஜெயராஜன் | In :

கணவன் நாளுக்கு நாள் உடல் நலிந்து போவதைக் கண்ட மனைவி, அவனை ஒரு டாக்டரிடம் அழைத்து சென்றாள் .டாக்டர் நன்கு பரிசோதித்து விட்டு அந்த பெண்ணைத் தனியே அழைத்துச் சென்று சொன்னார்,''உன் கணவன் ரொம்பவும் பலமின்றி இருக்கிறார்.எனவே தினமும் நல்ல உணவுகளை சமைத்துக் கொடுங்கள்.அவரிடம் ரொம்ப அன்பாகப் பேசுங்கள்.உங்கள் பிரச்சினைகளை அவரிடம் சொல்லி முறையிடாதீர்கள்.அவர் உணர்ச்சி வசப்படும்படி ஏதும் பேசாதீர்கள்.நீங்கள் எந்நேரமும் தொலைக்காட்சிப் பெட்டி அருகேயே இருக்காமல் அவரை அடிக்கடி சென்று கவனியுங்கள்.'' டாக்டருக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு வீடு திரும்பும்போது கணவன் கேட்டான்,''டாக்டர் உன்னைத் தனியே அழைத்து என்ன சொன்னார்?''மனைவி முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு சொன்னாள்,''நீங்கள் தேறுவது மிகவும் கடினம் என்று சொன்னார்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

ஜோக் சிறப்பு!

Post a Comment