உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன்மொழிகள்-41

1

Posted on : Thursday, February 21, 2013 | By : ஜெயராஜன் | In :

வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு;
தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு.
********
விருப்பங்கள் அரை மடங்கு அதிகமானால்
சிரமங்கள் இரு மடங்கு அதிகமாகும்.
******
முட்டாள்தனம் என்பது புத்தியில்லாமை அல்ல.;
புத்தியை உபயோகிக்காத நிலைதான்.
******
அனுபவம் ஒரு நல்ல பள்ளிக்கூடம்.
முட்டாள்கள் அதில் பாடம் கற்றுக் கொள்வதில்லை.
******
'முடியாது' என்பது சோம்பேறிகள் முணுமுணுக்கும் மந்திரம்.
******
ஒரு பெண்ணின் உண்மையான அன்புக்கு முன்னால்
எந்த ஆணும் குழந்தையாகி விடுகிறான்.
******
தைரியத்தைவிட ஆர்வம் வென்று விடுகிறது,அச்சங்களை.
******
யாராக இருக்க விரும்புகிறோம் என்பதைவிட
யாருக்காக இருக்க விரும்புகிறோம்
என்பதுதான் முக்கியம்.
******
தன்  மீது விழும் ஒவ்வொரு அடியும்
தன்னை சிற்பமாக ஆக்குகிறது
என்பது கல்லுக்குத் தெரியாது.
******
வெற்றிக்கும் தோல்விக்கும் அதிக வித்தியாசம் கிடையாது.
கடமையை செய்தால் வெற்றி!
கடமைக்காக செய்தால் தோல்வி.
******


தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

அருமை... உண்மைகள்...

Post a Comment