உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கடித்து வாழலாம்.

1

Posted on : Wednesday, February 27, 2013 | By : ஜெயராஜன் | In :

''உங்களுக்கு அல்சராமே?''
'அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்குறீங்க!'
******
''குடி குடியைக் கெடுக்கும் என்று ஒரு படம் எடுத்தீங்களே ,என்ன ஆச்சு?''
'ஊத்திக்குச்சு.'
******
''திடீரென்று உங்கள் பையன் ஒன்றும் பேசாது ஊமை போல ஆகிவிட்டானே?''
'அவனுக்கு போன மாதம் தான் திருமணம் ஆயிற்று.'
******
''இன்னிக்கு பேங்க் விடுமுறை.இல்லையென்றால் பணம் கிடைத்திருக்கும்.''
'பேங்க் அக்கவுன்ட் வைத்திருக்கிறாயா?'
''இல்லை.என் நண்பர் பாங்கில் வேலை செய்கிறார்.அவரிடம் கடன் வாங்கியிருப்பேன்.''
******
''என்னப்பா,நம்ம தொகுதியில நல்லது ஒன்னும் நடக்கல என்று மக்கள் பேசிக் கொள்கிறார்களாமே,உண்மைதானா?''
''தொகுதியில ஒரு வாரமா நடந்துக்கிட்டிருக்கீங்கல்ல,அதை சொல்லியிருப்பாங்க.'
******
கணவன்:என்ன ராணி,இன்று நீயே சமையல் செய்து கொள்வதாக சொல்லி விட்டாயே.ஏன்,எனது சமையல் நன்றாக இல்லையா?
மனைவி:நீங்கள் பாட்டுக்கு நல்லா சமைச்சுப் போட்டு விடுகிறீர்கள்.வந்த விருந்தாளிகளும் உங்கள் சமையலை ஆஹா,ஓஹோ ன்னு பாராட்டிக்கிட்டே இங்கிருந்து போக மாட்டேன் என்கிறார்களே!
******
அம்மா:வாசல்ல என்னடா சத்தம்?
மகன்:பழைய பொருள் ஏதாவது இருக்கிறதா என்று ஒரு ஆள்  கேட்கிறார் அம்மா.
அம்மா:உங்கள் அப்பா வீட்டில் இல்லை என்று சொல்.
 ******
''என்னங்க.பல் ரொம்ப வலிக்குதுங்க.''
'அப்படி என்னத்தக் கடிச்சுத் தொலைச்ச?'
''உங்க அம்மாவைத்தான்.''
******
''ஆஸ்பத்திரிக்கு என் மனைவியைக் கூட்டிட்டுப் போகும்போது வாசலிலேயே பிரசவம் ஆயிடுச்சு.''
'அப்பா டோர் டெலிவரின்னு சொல்லு.'
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

சிலது கடி... பலது ஹா... ஹா...

Post a Comment