உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வருத்தம் ஏன்?

2

Posted on : Saturday, February 02, 2013 | By : ஜெயராஜன் | In :

நிலவு தேய்வதனால் கூட வானம் வருந்துவதில்லை.
பூக்கள் உதிர்வதனால் கூட கொடி காய்வதில்லை.
மனிதனே!
நீ மட்டும் ஏன் சிறு இழப்புக்கெல்லாம் வருத்தம் கொள்கிறாய்?
******
செத்துப்போன
வண்ணத்துப்பூச்சியை
சுமந்தபடி எறும்புகள்.
பிணத்தைச் சுமக்கும் கவலையுமில்லை.
விருந்தை சுமக்கும் கர்வமும் இல்லை அவைகளுக்குள்.
******
ஒரு கைத்தடி
பார்வை இழந்தவனுக்குக் கண்ணாக இருக்கிறது.
கால் இழந்தவனுக்கு பார்வையாக இருக்கிறது.
மனிதா,
நீ அந்தக் கைத்தடியை விடத் தாழ்ந்தவனா?
*****
                                 --ரசித்த புதுக் கவிதைகள்.


தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

டியர் சார் ;நீங்கள் ரசித்த புதுக் கவிதைகளை நானும் ரசித்தேன் .எழுதிய கவிஞர்களின் பெயரையும் சொன்னால் மேலும் ரசிக்க முடியுமே !

நண்பரே,இது எப்போதோ படித்தது.அதை எழுதியவர் யார் என்று ஞாபகம் இல்லை.

Post a Comment