உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நடுநிலை

0

Posted on : Thursday, January 12, 2012 | By : ஜெயராஜன் | In :

மிக மிக ஆடம்பரமாக வாழ்ந்து வந்த அரசன் ஒருவன் திடீரென ஒருநாள் புத்தரிடம் வந்து,''நான் எல்லாவற்றையும் துறந்து உங்கள் சீடனாக விரும்புகிறேன்,''என்றார்.அங்கிருந்த அனைவருக்கும் வியப்பு.இவரால் இங்கு வசதிக் குறைவுடன் வாழ இயலுமா என்பதுதான் அவர்களின் சந்தேகம்.ஆனால் புத்தர் அவரை அங்கு சேர அனுமதித்தார்.பெரிய ஆச்சரியம் அங்கு நடந்தது.அரசன் மிக எளிமையாக வாழ ஆரம்பித்தான்.எளிய உணவு உண்டு,தரையில் படுத்து,இட்ட பணிகளை முடித்தான்.ஒரு ஆண்டில் மிகவும் இளைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி விட்டான்.சீடர் ஒருவர் அந்த அரசன் பற்றிய புத்தரின் கருத்தைக் கேட்டார்.புத்தர் சொன்னார்,''அவர் அரசன் ஆக இருக்கும்போது தன்னைக் காட்டிலும் சிறந்த அரசன் இருக்கக் கூடாது என்று நினைத்தார்.பின் யாரோ துறவறம் நல்லது என்று கூறக் கேட்டு இங்கு வந்து தன்னைவிடச் சிறந்த துறவி யாரும் இருக்கக் கூடாது என்ற நினைப்பில் செயல் படுகிறார்.அவர் இடம் மாறியிருக்கிறாரே ஒழிய அவருடைய இயல்பு மாறவில்லை.''பின் அவர் அந்த முன்னாள் அரசனை அழைத்து,''வீணையில் தந்தி அதிகமாக முறுக்கப் பட்டிருந்தால் என்ன ஆகும்?''என்று கேட்டார்.அரசனும்,''வீணையின் தந்திகள் அறுந்து போகும்'' என்றார்.அடுத்து புத்தர்,''வீணையின் நரம்புகளைத் தளர்த்தினால் என்ன ஆகும்?''என்று கேட்டார். அரசனும்,''இசைக்க முடியாது,''என்றார்.புத்தர்,''நீயும் ஒரு வீணைதான்.மிகவும் ஆடம்பரமாகவும் இருக்க வேண்டாம்.உன்னை மிகவும் வருத்திக் கொள்ளவும் வேண்டாம்.நடுநிலையில் இருந்தால் போதும்,''என்றார்.அரசன் யோசிக்க ஆரம்பித்தான்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment