உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சற்றே பொறும் பிள்ளாய்!

0

Posted on : Thursday, January 05, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு கணவன் கடவுளிடம் வேண்டினான்,''நாள் முழுவது நான் கடுமையாக உழைக்கிறேன்.என் மனைவி வீட்டில் ஒரு சிரமமும் இல்லாது மகிழ்ச்சியாக இருக்கிறாள்.போதாக் குறைக்கு என்னிடம் வேறு குற்றம் காண்கிறாள்.எனவே என்னை பெண்ணாக்கி என் மனைவியை ஆணாக்கிவிடு.அப்போதுதான் அவளுக்கு ஆண்களின் துன்பமும் சிரமமும் புரியும்.''கடவுளும் அவனது வேண்டுகோளை ஏற்று மறுநாளே அவர்கள் இருவரையும் மாற்றிவிட்டார்.மனைவி ஆணானவுடன் வேலைக்கு சென்றாள்.பெண்ணான கணவன் காலை எழுந்து வீடு வாசல் சுத்தம் செய்து,அடுப்படி வேலைகளை முடித்து பிள்ளைகளை பள்ளிக்குத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு,கடைக்கு சென்று காய்கறிகள் வாங்கி வந்து சமையல் முடித்து,இப்படியாக இரவு நெடு நேரம் வரை வேலை இருந்தது .மறுநாள் எழுந்ததும் முதல் வேலையாகக் கடவுளிடம் ,''ஐயோ கடவுளே!பெண்களுக்கு இவ்வளவு துன்பங்கள் இருப்பதை உணராது இருந்து விட்டேனே!என்னால் இந்த பொறுப்புகளை சுமக்க முடியாது.தயவு செய்து என்னை மறுபடியும் ஆணாக்கி,என் மனைவியைப் பெண்ணாக்கிவிடு,''என்று அழுது வேண்டினான்.கடவுள் சொன்னார்,''உன் வேண்டுகோளை நான் ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் அதற்கு நீ நாற்பது வாரங்கள் காத்திருக்க வேண்டும்''.அவன் ஒன்றும் புரியாமல் விழிக்க,கடவுள் சொன்னார்,''இப்போது நீ கருவுற்றிருக்கிறாய்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment