உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சொந்தம்.

0

Posted on : Saturday, January 07, 2012 | By : ஜெயராஜன் | In :

சோமு தன் பசுவை மேய்த்துக் கொண்டிருந்தான்.அப்போது அந்த வழியே ஒருவன் அழகாகப்  பாடிக் கொண்டு வந்தான்.அந்த பாட்டின் இனிமை சோமுவைக் கவர்ந்தது.எனவே அவன் வந்தவனிடம்  சென்று,''அய்யா,எனக்கு இந்தப் பாட்டை ராகத்துடன் சொல்லிக் கொடுக்க முடியுமா?''என்று கேட்டான்.அவன் ,''அதற்கு என்ன சன்மானம் கொடுப்பாய்?''என்று கேட்க,சோமுவும் அவன் தன்னிடம் இருக்குமெதைக் கேட்டாலும் தருவதாகச் சொன்னான்.அவனும் பசுவைக் கொடுத்தால் பாடலை சொல்லித் தருவதாகக் கூறினான்.அந்தப் பாட்டின் மீது இருந்த லயிப்பின் காரணமாக சோமு உடனே அதற்கு ஒத்துக் கொண்டான்.அவனும் பாடலை சொல்லிக் கொடுக்க சோமுவும் அதை விரும்பி கற்றுக் கொண்டான்.பின் தன் பசுவை அவனிடம் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் அந்தப் பாட்டை பாடிக் கொண்டே தன் வீடு நோக்கி சென்றான். போகும் வழியில் ஒரு ஆற்றைக் கடந்ததும் ஒரு மரத்தடியில் சிறிது இளைப்பாறினான்.அப்போது அவன் இதுவரை பாடிக் கொண்டிருந்த பாடலை யாரோ பாடிக் கொண்டிருப்பதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.பாடலை அவனுக்கு சொல்லிக் கொடுத்தவன்தான் பாடிக் கொண்டிருந்தான்.உடனே கோபத்துடனவனிடம்,''இதோ பாருங்கள்,இந்தப் பாடலை நீங்கள் சொல்லிக் கொடுக்குமுன் பாடல் உங்களிடம் இருந்தது.பசு என்னிடம் இருந்தது.இப்போது என்னிடம் பசு இல்லை.பாடல் மட்டும்தான் இருக்கிறது.ஆனால் உங்களிடம் பசுவும் இருக்கிறது. பாடலும் உங்களிடம் இருக்கிறது.இது என்ன நியாயம்?''என்று கேட்டான்.இதற்கு பதில் சொல்லத்தெரியாத அந்த மனிதன் சிரித்துக் கொண்டே பசுவை சோமுவிடமே கொடுத்து விட்டுச் சென்றான்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment