உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அன்னை தெரசா

0

Posted on : Tuesday, December 24, 2013 | By : ஜெயராஜன் | In :

அன்னை தெரசாவிடம் பத்திரிக்கை நிருபர் ஒருவர் பேட்டி காண அனுமதி கிடைத்து சென்று இருந்தார்.குறிப்பிட்ட நேரத்துக்கு சற்று முன்னரே சென்று விட்டதால் உடனே அன்னையைப் பார்க்க முடியவில்லை.அந்த நிருபர் தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்.அன்னை வருவதற்குள் ஒரு சிகரெட் புகைத்துவிடலாம் என்று எண்ணி அங்கேயே ஒரு ஓரமாக நின்று புகைக்க ஆரம்பித்தார்.அவர் புகைத்து முடிக்குமுன்னரே அன்னை அவரைக் கடந்து அவரது அறைக்கு சென்று விட்டார்.அவர் அழைக்கப்பட்ட போது,அன்னை என்ன கேட்பாரோ என்ற அச்சத்தில் அவர் உள்ளே சென்றார்.ஆனால் அன்னை எப்போதும்போல சாந்தமான முக பாவத்துடன் அவரை வரவேற்றுவிட்டு புகை பிடிக்கும் பழக்கம் எவ்வளவு ஆண்டுகளாக இருக்கிறது என்று கேட்க அவரும் பத்து வருடங்கள் என்று பதில் உரைத்தார். ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்க அவரும் பத்து ரூபாய் ஆகும் என்று சொன்னார்.அந்தத் தொகையை சேவைக்குக் கொடுத்தால் எவ்வளவோ பேருக்கு உபயோகமாயிருக்குமே என்று அன்னை சொல்ல நிருபர்,''அது மிகச்சிறிய தொகை ஆயிற்றே,அதை வைத்து என்ன சேவை செய்ய முடியும்?''என்று கேட்டார்.அன்னை சொன்னார்,''தனிப்பட்ட முறையில் சேவை செய்பவர்களுக்குப் பணம் தேவையில்லை.ஆனால் சேவைக்கு ஒவ்வொரு பைசாவும் முக்கியமானது.நான் முதலில்  பத்து ரூபாயில்தான் எனது சேவையை ஆரம்பித்தேன்.சாலையில் கிடந்த ஒரு குஷ்டரோகியை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல உபயோகப்பட்டது,''அதன்பின் அந்த நிருபரிடம்,'இனி புகை பிடிப்பதில்லை'என்றும்,'அதனால் மிச்சப் படுத்தப் படும் பணத்தை போது சேவைக்குக் கொடுப்பேன்.'என்று உறுதிமொழி பெற்றுக் கொண்டுதான் அன்னை அவருக்குப் பேட்டி கொடுத்தார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment