உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சீட்டாட்டம்.

1

Posted on : Thursday, December 12, 2013 | By : ஜெயராஜன் | In :

சீட்டாட்டம் எப்படி வந்தது என்று தெரியுமா?
ஒரு முறை பிரெஞ்ச் மன்னன் ஒருவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது.ஒரு விசயத்தில் கவனம் செலுத்தாமல் பிரமை பிடித்து பல விசயங்களை உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான்.ஒருஅமைச்சர் இந்த நேரம்தான் ராஜா (கிங்),ராணி(க்வின்),மந்திரி(ஜேக்)இவர்களைப் படமாக்கி மன்னனின் கவனத்தை ஒரே விசயத்தில் கவனம் செலுத்தச் செய்யும் விளையாட்டான சீட்டாட்டத்தைக் கண்டு பிடித்தார்.மன்னன் விளையாடினான்.தொடர்ந்து விளையாடினான்.மன்னனின் பைத்தியம் தெளிந்து விட்டது.
ஆனால் இன்று சீட்டாட்டம் பலரைப் பைத்தியம் ஆக்கி விட்டது.
 அதில் உள்ள டைமண்ட் வைரத்தையும்,ஹார்ட் இருதயத்தையும்,ஸ்பேட் மண்வெட்டியையும்,கிளாவர் பிரண்டைத் தண்டு இலையையும் குறிக்கும்.
''சீட்டாடினால் ஒரு மனிதன் தன்னிடம் உள்ள வைரம் போன்ற பொருட்களை இழப்பான்.இதனால் மனம் நொந்து இதயம் வெடித்து சாவான்.அவனை மண் வெட்டியால் குழி தோண்டிப் புதைக்க நேரிடும்.குழி மீது பிரண்டை செடி வளர்ந்து வரும்.''என்று இந்த சீட்டுக் கட்டு சொல்லாமல் சொல்கிறது.
******
குடையை ஆங்கிலத்தில் UMBRELLA என்று சொல்வார்கள்.இது ஒரு இத்தாலிய வார்த்தை ஆகும்.UMBRA என்பது நிழலையும் YELLOW என்பது மஞ்சளையும் குறிக்கும்.மஞ்சள் துணி தரும் நிழல் என்று பொருள்.
******
பாகு என்றால் இனிப்பு என்று பொருள்.அல்  என்றால் அற்றுப் போகச் செய்தல் என்று பொருள்.பாகு+அல் +காய்=பாகற்காய். அதாவது இனிப்பை இல்லாமல் செய்யும் காய்தான் பாகற்காய்.
******
கருவுற்ற காலத்தில் கருப்பை குளிர்ந்து விடாமல் தேவையான வெப்பம் பெற முன் காலத்தில் கறிவேப்பிலை சாப்பிடுவார்கள்.கரு+வெப்ப+இலை=கருவெப்ப இலை.இதுதான் நாளடைவில் கறிவேப்பிலை என்றாயிற்று.
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

நல்லது நன்றி...,

Post a Comment