உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கோடீஸ்வரன்

2

Posted on : Tuesday, December 03, 2013 | By : ஜெயராஜன் | In :

முல்லாவின் நண்பர் ஒருவர் கேட்டார்,''நீங்கள் தூங்கி எழுந்ததும்,நீங்கள் ஒரு கோடி ரூபாய்க்கு அதிபதி ஆகி விட்டீர்கள் என்று தகவல் வந்தால் என்ன செய்வீர்கள்?''ஒருவர் சொன்னார்,''நான்பெரிய பங்களாவை விலை பேசுவேன்,''என்றார்.இன்னொருவர்,''இந்தப் பணத்தைக்கொண்டு எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று விபரம் சேகரிப்பேன்.'' முல்லா சொன்னார்,''நான் மறுபடியும் தூங்கப் போவேன்,'' கேள்வி கேட்டவருக்கு ஒன்றும் புரியவில்லை.முல்லா விளக்கினார்,''நான் மறுபடியும் தூங்கி எழுந்தால் இன்னொரு கோடி கிடைக்கவாய்ப்பு இருக்கிறது அல்லவா?''
******
முல்லா கோபத்துடன் ஒரு பெரியவரைப் பார்த்து,''நீ நரகத்துக்குப்  போ,''என்று கத்தினார்.அருகில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சி.ஏனெனில் அந்தப் பெரியவர் அவ்வளவு நல்லவர்.உடனே எல்லோருமொன்று கூடி முல்லா அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.முல்லாவும் வேறு வழியின்றி போகவே பெரியவரைப் பார்த்து சொன்னார்,''நீங்கள் நரகத்துக்குப் போக வேண்டாம்.''
******
முல்லா மனநலம் குன்றியவர்களுக்கான மருத்துவ மனையில்  சேர்க்கப் பட்டிருந்தார்.சில நாள் கழித்து அவரைப் பார்க்க வந்த நண்பர் சொன்னார்,''நான் டாக்டரிடம் பேசினேன்.நீங்கள் குணமாகி வருவதாகவும்,விரைவில் வீட்டிற்கு சென்று விடலாம் என்றும் சொன்னார்,''முல்லா கோபத்துடன் சொன்னார்,''இவ்வளவு வசதியான இடத்தைவிட்டுவிட்டு,பேய்  போலக் கத்தும் என் மனைவி இருக்கும் வீட்டிற்குத் திரும்பச் செல்ல எனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?"'
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

நல்லது ஐயா... நன்றி...

haa haaa

Post a Comment