உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

இது தெரியுமா?

0

Posted on : Wednesday, August 21, 2013 | By : ஜெயராஜன் | In :

சங்கரன் என்றால் யார்?சம் என்றால் மங்களம்.கரோதி என்றால் உண்டு பண்ணுதல் .எனவே மங்களம் உண்டு பண்ணுபவன் தான் சங்கரன்.
******
சேஷன் என்றால் தாசன்,அடிமை என்று பொருள்.
******
நிர்மலன் என்றால் அழுக்கில்லாதவன் என்று பொருள்.
******
அச்சுதன் என்றால் தான் நழுவி கீழே விழாதவன்:தன்னைப் பற்றியவர்களை நழுவ விடாதவன்.
******
சாரு  என்றால் அழகு.
******
அஸ்தி என்றால் இருக்கிறது என்று பொருள்.இருக்கிறது என்று சொல்பவன் ஆஸ்திகன்.நாஸ்தி என்றால் இல்லை என்று பொருள்.இல்லை என்று சொல்பவன் நாஸ்திகன்.
******
கிருஷ்ணன் என்ற பேருக்குப் பொருள் என்ன தெரியுமா?க்ரு என்றால்  பூமி.ண என்றால் விடுவித்தல்.பூமியிலிருந்து நம்மை விடுவித்து மோட்சத்தைக் கொடுப்பவன் கிருஷ்ணன்.
******
சுதர்ஷன் என்றால் நல்ல பாதையைக் காட்டுபவன் என்று பொருள்.
******
விபு என்றால் எங்கும் நிறைந்திருப்பவன் என்று பொருள்.
******
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment